ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து இதற்கான நியமன கடிதத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பெற்றுக் கொண்டார்.